செய்திகள்
கோப்பு படம்

டெல்லியில் இன்று லேசான நில அதிர்வு

Published On 2019-11-19 14:18 GMT   |   Update On 2019-11-19 14:18 GMT
டெல்லியில் இன்று மாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் குலுங்கியது. இதனால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதனால் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் குலுங்கியதால் அஞ்சமடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

அமெரிக்க புவியியல் மையம், ரிக்டர் அளவுகோளில் 5.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் இந்திய-நேபாள எல்லைபகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தது.
Tags:    

Similar News