செய்திகள்
நாளை 142-வது பிறந்தநாள்: பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்
தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை காலை 8 மணிக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
சென்னை:
தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (17-ந் தேதி) காலை 8 மணிக்கு அண்ணாசாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.