இஸ்லாம்
நாகூர் தர்கா

நாகூர் தர்காவில் கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Published On 2022-01-04 04:26 GMT   |   Update On 2022-01-04 04:26 GMT
தர்காவில் உள்ள 5 மினராக்களில் ஏற்றப்படும் கொடிகளை அலங்கரிக்கப்பட்ட 5 கப்பல்களிலும், ஒரு செட்டி பல்லாக்கு, சாம்பிராணி பல்லாக்கு ஆகிய 5 பல்லாக்கு மட்டும் கொண்டு வர நாகை மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக ஊர்வலம் அதிக அளவில் நடத்த வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாகை ஜமாத்தில் இருந்து தர்காவில் உள்ள 5 மினராக்களில் ஏற்றப்படும் கொடிகளை அலங்கரிக்கப்பட்ட 5 கப்பல்களிலும், ஒரு செட்டி பல்லாக்கு, சாம்பிராணி பல்லாக்கு ஆகிய 5 பல்லாக்கு மட்டும் கொண்டு வர நாகை மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து மாலை 4 மணி அளவில் நாகையில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக நாகூரை சென்றடையும். நாகூரில் முக்கிய வீதிகளுக்கு ஊர்வலம் சொல்லாமல் அலங்கார வாசலோடு ஊர்வலம் நிறைவு பெறுகிறது.

கப்பலில் இருந்து கொடிகள் இறக்கப்பட்டு தர்கா கலிபா மஸ்தான் சாஹிப் ஓதிய பிறகு 5 மினாரக்களில் ஒரே நேரத்தில் கொடியேற்றப்படுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் 13-ந்தேதி(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
Tags:    

Similar News