ஆன்மிகம்
சித்தூர் சிதம்பரேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

சித்தூர் சிதம்பரேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

Published On 2021-03-09 07:04 GMT   |   Update On 2021-03-09 07:04 GMT
சித்தூர் துர்க்காநகர் காலனியில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்தனர்.
சித்தூர் துர்காநகர் காலனியில் பிரசித்திப் பெற்ற சிவகாமிசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் 12 நாள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. கடந்த 1-ந்தேதியில் இருந்து தினமும் காலை, மாலை இருவேளை வாகன சேவை நடந்து வருகிறது.

விழாவின் 8-வது நாளான நேற்று காலை 6 மணியளவில் ருத்ராபிஷேகம், யாக சாலை பூஜை, காலை 10 மணியளவில் மீன லக்னத்தில் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரில் உற்சவர்களான சிவகாமிசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தனர்.

விழாவின் 9-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ருத்ராபிஷேகம், யாகசாலை பூஜை, காலை 9 மணியளவில் பூத வாகன வீதிஉலா, மாலை ருத்ராபிஷேகம், யாக சாலை பூஜை, இரவு அஸ்வ வாகன வீதிஉலா நடக்கிறது.

விழாவின் 10-வது நாளான நாளை (புதன்கிழமை) காலை 8 மணியளவில் காமதேனு வாகன வீதிஉலா, மாலை பிக்சட்டேஸ்வரர் உற்சவம் நடக்கிறது.

11-ந்தேதி காலை லிங்கேஸ்வரர் வீதி உலா, 12-ந்தேதி காலை ஏகாந்த சேவை நடக்கிறது. அத்துடன் சாந்தி ஹோமம், மாலை பல்லக்கு சேவை நடக்கிறது. விழாவில் தினமும் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News