செய்திகள்
கோப்புப்படம்

சென்னை துறைமுக ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை

Published On 2021-01-21 20:40 GMT   |   Update On 2021-01-21 20:40 GMT
சென்னை துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 40 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
தாம்பரம்:

சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம், திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 43). இவர், சென்னை துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் உள்ள அறையை பூட்டிவிட்டு, கீழ்தளத்தில் குடும்பத்தினருடன் படுத்து தூங்கினார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது, மாடி அறையின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடியை அடுத்த எம்.கே.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது அபி முஸ்தபா (33). இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று காலை வீட்டுக்கு வந்தபோது, மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 17 பவுன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி அரைஞாண் கொடி, ரூ.27 ஆயிரத்தை திருடிச்சென்றுவிட்டது தெரிந்தது.

இதுபற்றி எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News