செய்திகள்
மர்மமான முறையில் இறந்து கிடந்த 12 மயில்கள்- வனத்துறையினர் விசாரணை
வேப்பந்தட்டை அருகே 12 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த அரும்பாவூரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 60). விவசாயியான இவரது தென்னந்தோப்பில் நேற்று 12 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தேவராஜ் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வேப்பந்தட்டை வனசரக அலுவலர் மாதேஸ்வரன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மயில்களை கால்நடை மருத்துவர் உதவியுடன் பரிசோதனை மேற்கொண்டனர்.
பின்னர் இறந்த மயில்களை அருகில் உள்ள வனப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். மேலும் யாரேனும் மயிலுக்கு விஷம் வைத்துக் கொன்றனரா? அல்லது விஷம் தெளித்த பயிரை மயில்கள் தின்று இறந்தனவா என வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த அரும்பாவூரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 60). விவசாயியான இவரது தென்னந்தோப்பில் நேற்று 12 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தேவராஜ் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வேப்பந்தட்டை வனசரக அலுவலர் மாதேஸ்வரன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மயில்களை கால்நடை மருத்துவர் உதவியுடன் பரிசோதனை மேற்கொண்டனர்.
பின்னர் இறந்த மயில்களை அருகில் உள்ள வனப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். மேலும் யாரேனும் மயிலுக்கு விஷம் வைத்துக் கொன்றனரா? அல்லது விஷம் தெளித்த பயிரை மயில்கள் தின்று இறந்தனவா என வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.