உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

புதுவையில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

Published On 2022-01-15 10:51 GMT   |   Update On 2022-01-15 10:51 GMT
புதுவையில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
புதுச்சேரி:

புதுவையில்  2 ஆயிரத்து 344 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக ஆயிரத்து 213 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் ஆயிரத்து 100, காரைக்காலில் 93, ஏனாமில் 3, மாகியில் 17 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை  பெற்று வருகின்றனர். புதுவையில் 82, காரைக்காலில் 20, ஏனாமில் 3, மாகியில் 18 பேர் என 123 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புதுவை மாநிலத்தில் இப்போது 6 ஆயிரத்து 785 பேர் கொரோனா  தொற்றுடன் உள்ளனர். மாகியில் 2 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியா னோர் எண்ணிக்கை ஆயிரத்து 886 ஆக உயர்ந் துள்ளது.   புதுவையில்  2-வது தவணை  உட்பட 14 லட்சத்து 95 ஆயிரத்து 877 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

இத்தகவலை  சுகாதா ரத்துறை  தெரிவித்துள்ளது. 

கொரோனா தொற்று எண்ணிக்கையோடு, பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருவது பொதுமக்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News