செய்திகள்

கிருஷ்ணகிரியில் வாக்களிக்க பணம் கொடுத்த தி.மு.க. பிரமுகர் 2 பேர் கைது

Published On 2019-04-19 17:09 GMT   |   Update On 2019-04-19 17:09 GMT
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு பணம் கொடுக்க நின்ற தி.மு.க. பிரமுகர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார், பறக்கும் படை அதிகாரி நாகராஜ் தலைமையில் நேற்று கிருஷ்ணகிரி அருகே மாதேப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். 

அப்போது அந்த பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை போலீஸார், சுற்றி வளைத்து, பிடித்து விசாரணை நடத்தினர். அதில், தி.மு.க. கட்சியை சேர்ந்த மரிக்கம்பட்டி முருகன் (வயது 50), கோவிந்தசாமி (67) என்பது தெரிய வந்தது. 

இவர்கள் 2 பேரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 13 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News