செய்திகள்
துரைமுருகன்

எம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் சென்றபோது தி.மு.க. சிறிய இடர்பாடுகளைதான் சந்தித்தது: துரைமுருகன்

Published On 2020-08-05 14:08 GMT   |   Update On 2020-08-05 14:08 GMT
எம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் பிரிந்து சென்றபோது தி.மு.க. சிறிய இடர்பாடுகளைத்தான் சந்தித்தது என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக-வில் இருந்து வி.பி. துரைசாமி பா.ஜனதாவில் இணைந்தார். தற்போது ஆயிரம் விளக்கு தொகுதி கு.க. செல்வம் பா.ஜனதாவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. டெல்லி சென்ற பா.ஜனதா தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார். இன்று தமிழக பா.ஜனதா அலுவலகத்திற்கு சென்றார். திமுக அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.

இந்நிலையில திமுக பொருளாளர் துரைமுருகன் இதுகுறித்து கூறுகையில் ‘‘எம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் பிரிந்து சென்றபோது திமுக சிறிய இடர்பாடுகளைதான் சந்தித்தது. வி.பி. துரைசாமி, கு.க.செல்வம் போன்றவர்களால் திமுக-வுக்கு எந்த இடர்பாடும் இல்லை’’ என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News