செய்திகள்
கோப்புப்படம்

கோவையில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

Published On 2021-09-26 09:40 GMT   |   Update On 2021-09-26 09:40 GMT
கோவையில் மின்சாரம் தாக்கியதில் பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). பெயிண்டர். இவர் நேற்று பீளமேடு பி.கே.டி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வேலைக்கு சென்றார்.

அப்போது அங்கு கட்டிடத்தில் பெயிண்ட் அடிப்பதற்காக அங்கிருந்த இரும்பு ஏணியை தூக்கினார்.

இதில் எதிர்பாராதவிதமாக அந்த ஏணி அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் பட்டது.

அதில் மின்சாரம் தாக்கி ராஜ்குமார் தூக்கி வீசப்பட்டார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மற்ற ஊழியர்கள் படுகாயமடைந்த ராஜ்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News