செய்திகள்
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மிரட்டல் - 2 பேர் அதிரடி கைது
முதல்-மந்திரி பினராயி விஜயனின் அலுவலகத்திற்கு பெங்களூருவை சேர்ந்த பிரேம்ராஜ் என்பவர் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.
திருவனந்தபுரம்:
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் அலுவலகத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. முதல்-மந்திரிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது யார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் எர்ணாகுளம் அருகே உள்ள வைக்கம் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர், முதல்-மந்திரி அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மிரட்டல் கடிதம் அனுப்பியதற்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியது. சிவகுமாரின் நண்பர் ஒருவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் தாக்கியுள்ளனர். அந்த போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவகுமார், முதல்-மந்திரியின் அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரிய வந்தது.
இதேபோன்று முதல்-மந்திரி பினராயி விஜயனின் அலுவலகத்திற்கு பெங்களூருவை சேர்ந்த பிரேம்ராஜ் என்பவர் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சேலத்தில் பதுங்கியிருந்த அவரை கேரள போலீசார் கைது செய்தனர்.
முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம் மற்றும் தொலைபேசியில் மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் அலுவலகத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. முதல்-மந்திரிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது யார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் எர்ணாகுளம் அருகே உள்ள வைக்கம் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர், முதல்-மந்திரி அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மிரட்டல் கடிதம் அனுப்பியதற்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியது. சிவகுமாரின் நண்பர் ஒருவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் தாக்கியுள்ளனர். அந்த போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவகுமார், முதல்-மந்திரியின் அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரிய வந்தது.
இதேபோன்று முதல்-மந்திரி பினராயி விஜயனின் அலுவலகத்திற்கு பெங்களூருவை சேர்ந்த பிரேம்ராஜ் என்பவர் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சேலத்தில் பதுங்கியிருந்த அவரை கேரள போலீசார் கைது செய்தனர்.
முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம் மற்றும் தொலைபேசியில் மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.