செய்திகள்
தமிழக அரசு

சென்னை காவல் ஆணையர் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

Published On 2021-05-07 19:47 GMT   |   Update On 2021-05-07 19:57 GMT
சென்னை மாநகர காவல் ஆணையாளராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவின் பேரில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அதன்படி, தமிழக உளவுத்துறை ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய காவல் ஆணையராக ஐ.பி.எஸ். அதிகாரி சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழக சட்டம் ஒழுங்கு  ஏடிஜிபி ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
Tags:    

Similar News