செய்திகள்
மதுரை அருகே கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட 5 பேர் கைது
மதுரை அருகே கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை கரிமேடு போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கரிமேடு மார்க்கெட் அருகே கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூதாட்டியை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கரிமேடு பகுதியை சேர்ந்த ராணி(வயது 61) என்பதும், அவர் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை கைது செய்தனர்.
அதே போன்று செல்லூர் போலீசார் விளாங்குடி பகுதியில் கஞ்சா விற்ற சண்முகராஜா(25), தத்தனேரி பகுதியில் சுப்பிரமணி(26) செல்லூர் அகிம்சாபுரத்தில் வேல்முருகன்(26) ஆகியோரை கைது செய்தனர். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் ராமையா தெருவில் ரோந்து சென்ற போது அங்கு கஞ்சா விற்ற ஒருவரை பிடித்து கைது செய்தனர்.