பல்லடத்தில் மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பலி
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள நொச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கோமதி (வயது 41). பனியன் தொழிலாளி. நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக தனது தம்பி அருள்பிரகாசுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். மோட்டார் சைக்கிள் அல்லாளபுரம் சாலையில் சென்றபோது கோமதியின் சேலை மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் சிக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கோமதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிசிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோமதி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.