உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் பலத்த காற்றால் விழுந்த மரம்
மின் கம்பிகள் மீது மரம் விழுந்ததால் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
பல்லடம்:
பல்லடம் பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இடி மின்னலுடன் பெய்த மழையில் பனை மரம் தீப்பற்றி எரிந்தது. இந்த நிலையில் நேற்று மாலை காற்றுடன் மழை பெய்து வந்த நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனையில் இருந்த சுமார் 20 வயதுடைய பாதானி மரம், பலத்த காற்றால் ரோட்டில் சாய்ந்தது.
அதிர்ஷ்டவசமாக அந்த சமயம் போக்குவரத்து குறைவாக இருந்ததால் விபத்து ஏற்படவில்லை. மேலும் அந்தப் பகுதி அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் ஆகும். இரவு நேரமானதாலும் மழை பெய்து கொண்டிருந்ததாலும் அங்கு பொதுமக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.
மின் கம்பிகள் மீது மரம் விழுந்ததால் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் சரி செய்து கொண்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.