ஆன்மிகம்
வேளாங்கண்ணி மாதா

புண்ணியவாளன்புரம் வேளாங்கண்ணி ஆலய திருவிழா

Published On 2020-09-10 04:49 GMT   |   Update On 2020-09-10 05:09 GMT
காவல்கிணறு புண்ணியவாளன்புரம் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா ஒவ்வொரு திருநாளிலும் மாலை 5 மணிக்கு ஜெபமாலையும், தொடர்ந்து பாடல் திருப்பலியும் நடந்தது.
காவல்கிணறு புண்ணியவாளன்புரம் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு திருநாளிலும் மாலை 5 மணிக்கு ஜெபமாலையும், தொடர்ந்து பாடல் திருப்பலியும் நடந்தது.

10-ம் திருவிழா அன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, தூத்துக்குடி கத்தோலிக்க பிஷப் ஸ்டீபன் தலைமையில் மறையுரை, ஆடம்பர திருப்பலி நடந்தது. திருவிழா ஏற்பாடுகளை பங்கு குரு ஆரோக்கியராஜ், பங்கு மேய்ப்பு பணிக்குழு தலைவர் மரியமிக்கேல், செயலாளர் மனோகர், பொருளாளர் மில்டன் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News