செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் அதிரடி சோதனை - வரி செலுத்தாமல் இயங்கிய ஆம்னி பஸ்கள் பறிமுதல்

Published On 2021-10-08 07:59 GMT   |   Update On 2021-10-08 07:59 GMT
ஒரே நிறுவனத்தை சேர்ந்த 2 பஸ்கள் உட்பட 3 ஆம்னி பஸ்கள் தமிழகத்துக்கு உரிய வரி செலுத்தாமல் இயங்கியது தெரிய வந்தது.
திருப்பூர்:

தமிழகத்தில் உரிய வரி செலுத்தாமல் இயங்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்த போக்குவரத்து துறை கமிஷனர் மற்றும் இணை கமிஷனர்கள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து திருப்பூர் கணியூர் சுங்கச் சாவடி பகுதியில் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சித்ரா, வேலுமணி, பாலசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய குழு சோதனை மேற்கொண்டது.

இதில் ஒரே நிறுவனத்தை சேர்ந்த 2 பஸ்கள் உட்பட 3 ஆம்னி பஸ்கள் தமிழகத்துக்கு உரிய வரி செலுத்தாமல் இயங்கியது தெரிய வந்தது. இதையடுத்து 3 பஸ்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
Tags:    

Similar News