ஆன்மிகம்
திருச்சி மலைக்கோட்டை கோவில்

திருச்சி மலைக்கோட்டை கோவில் தெப்பத்திருவிழா இன்று தொடக்கம்

Published On 2021-03-19 08:47 GMT   |   Update On 2021-03-19 08:47 GMT
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் தெப்பத்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் தென்கயிலாயம் என்று போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் 23, 24, 25 ஆகிய நாட்களில் தாயுமானவர் திருமேனி மீது மாலை நேரத்தில் சூரிய ஒளிபட்டு பொன் வண்ணமாக பக்தர்களுக்கு காட்சி அளிப்பதை பார்க்கலாம். இது சூரிய பூஜை ஆகும்.

அதுபோல் குழலம்மை சமேத தாயுமானசுவாமிக்கு தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு தெப்பத்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இன்று இரவு 7 மணிக்கு சுவாமி கேடயத்தில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். இதேபோல் ஒவ்வொரு நாளும் இரவு உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம் மற்றும் புறப்பாடு நடைபெறும்.

இதில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 27-ந்தேதி(சனிக்கிழமை) மாலை 7 மணிக்கு மலைக்கோட்டைக்கு மேற்கில் உள்ள பிரம்ம தீர்த்தம் என்ற சோமரோகிணியில் (தெப்பக்குளம்) நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி, கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News