உள்ளூர் செய்திகள்
மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

Published On 2022-01-19 09:48 GMT   |   Update On 2022-01-19 09:48 GMT
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி சார்பில் மாணவர்கள் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
நாகப்பட்டினம்:

நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு 
வரும் நாட்டு நலப்பணித்திட்டம் (என்.எஸ்.எஸ்) சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி தெத்தியில் நடைபெற்றது.

தொடர்ந்து சுற்றுச்சூழல் விழிப்புணவு ஓவியப்போட்டி, மரக்கன்றுகள் 
நடும் பணி நடைபெற்றது.

மாணவ&மாணவிகள், பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த 
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கல்லூரி கல்விக் குழுமத்தலைவர்  எஸ்.ஜோதிமணி அம்மாள், 
செயலர் எஸ்.பரமேஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினர் 
அருள் பிரகாஷும், சங்கர் கணேஷ், முதன்மை செயல் அலுவலர் 
சந்திரசேகர், இயக்குனர் விஜயசுந்தரம், கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.ராமபாலன், தேர்வு நெறியாளர் முனைவர் சின்னதுரை, 
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் சிவராமகிருஷ்ணன், என்.எஸ்.எஸ். மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News