செய்திகள்
கார் விபத்தில் காயமடைந்த மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார்
கர்நாடகத்தில் கார் விபத்துக்குள்ளாகி காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார்.
பனாஜி:
மத்திய ஆயுஷ் துறை மந்திரி ஸ்ரீபாத் நாயக் கடந்த மாதம் 12-ம் தேதி கர்நாடகத்தில் கார் விபத்துக்கு உள்ளானதில் காயமடைந்தார். இதனால் அவர் கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் நாளை (24-ம் தேதி) டிஸ்சார்ஜ் ஆக உள்ளார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மத்திய மந்திரியின் மனைவி விஜயா நாயக் சிகிச்சை பலனின்றி இறந்தது நினைவிருக்கலாம்.
மத்திய ஆயுஷ் துறை மந்திரி ஸ்ரீபாத் நாயக் கடந்த மாதம் 12-ம் தேதி கர்நாடகத்தில் கார் விபத்துக்கு உள்ளானதில் காயமடைந்தார். இதனால் அவர் கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் நாளை (24-ம் தேதி) டிஸ்சார்ஜ் ஆக உள்ளார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மத்திய மந்திரியின் மனைவி விஜயா நாயக் சிகிச்சை பலனின்றி இறந்தது நினைவிருக்கலாம்.