செய்திகள்
ஆரணியில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி கொரோனா வார்டாக மாற்றம்
கொரோனா பாதித்தவர்களுக்கு அடிப்படை வசதிகள் மருத்துவ வசதிகள் சரிவர உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.
ஆரணி:
ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தற்போது கொரோனா வார்டாக தயார் நிலையில் உள்ளதை மாவட்ட திட்ட இயக்குநர் ஆர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
80 அறைகளில் தலா அறைக்கு 3 படுக்கை உள்ளிட்ட 240 படுக்கைகள், கொரோனா பாதித்தவர்களுக்கு அடிப்படை வசதிகள் மருத்துவ வசதிகள் சரிவர உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். இந்த பொறியியல் கல்லூரியில் ஆரணி சுற்றியுள்ள கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் இந்த இடத்தில் தங்கி தரமான சிகிச்சை பெறலாம் என்றும் தெரிவித்தார்.
இதில் ஆரணி உதவி செயற்பொறியாளர் ரவிசந்திரன் உதவி பொறியாளர்கள் ஜெயலட்சுமிராஜேந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரி ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.