செய்திகள்
நகைகள் அபேஸ்

மதுரை அருகே போலீஸ் பெயரில் மூதாட்டியிடம் 11 பவுன் தங்க நகைகள் அபேஸ்

Published On 2021-10-24 10:20 GMT   |   Update On 2021-10-24 10:20 GMT
போலீஸ் பெயரில் மூதாட்டியிடம் 11 பவுன் தங்க நகைகள் அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை:

மதுரை சம்பக்குளத்தை சேர்ந்த ஜேக்கப் மனைவி குளோரி (வயது 63). இவர் சர்வேயர் காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

அப்போது அங்கு வந்த 2 பேர்,போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டு இங்கு வழிப்பறி தொல்லை அதிகமாக உள்ளது. எனவே உங்கள் நகையை கழற்றி மணிபர்சில் வைத்துக் கொள்ளுங்கள். அது தான் உங்களுக்கு பாதுகாப்பு என்றனர்.

இதனை நம்பிய குளோரி தான் அணிந்திருந்த 11 பவுன் நகைகளை கழற்றி மணிபர்சில் வைத்தார். அப்போது ஜிப் சரியாக மூடவில்லை.

எனவே அந்த 2 பேரும் மணி பர்சை வாங்கி மூடிவிட்டு மூதாட்டியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து மூதாட்டி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு தற்செயலாக அவர் மணி பர்சை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் இருந்த 11 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த குளோரி திருப்பாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News