செய்திகள்
பல்லடம் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
பல்லடம்:
மதுரையை சேர்ந்த மணிகண்டன் மகன் வினோத்குமார் (வயது 35). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று சிவகங்கையிலிருந்து விறகு லோடு ஏற்றிக்கொண்டு பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பல்லடம் - தாராபுரம் மெயின் ரோட்டில், புத்தரச்சல் என்ற இடம் அருகே செல்லும்போது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் லாரியின் அடியில் சிக்கிய வினோத் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த காமநாயக்கன் போலீசார் வினோத்குமாரின் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.