செய்திகள்
கோப்பு படம்

வடுவூர் அருகே விவசாயி மர்ம மரணம்- போலீசார் விசாரணை

Published On 2020-10-17 13:45 GMT   |   Update On 2020-10-17 13:45 GMT
வடுவூர் அருகே வயலில் விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடுவூர்:

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள பல்லாக்கொல்லையை சேர்ந்தவர் சக்கரபாணி (வயது48). விவசாயி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை சக்கரபாணி தனது வயலுக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து சக்கரபாணியின் மகன் சூர்யா(19) தனது தந்தைக்கு டீ எடுத்து கொண்டு சென்றுள்ளார். அப்போது வயலில் சக்கரபாணி வாயில் நுரை தள்ளிய நிலையில் வயலில் மர்மமான முறையில் மயங்கி கிடந்துள்ளார். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சூர்யா அருகில் இருந்தவர்களை அழைத்தார். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் சக்கரபாணியை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சக்கரபாணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதுகுறித்து சூர்யா கொடுத்த புகாரின்பேரில் வடுவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News