உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை சித்திரை வசந்த உற்சவ விழாவில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை சித்திரை வசந்த உற்சவ விழாவில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை
அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நடந்து வருகிறது. நேற்று அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளினார். 3-ம் பிரகாரத்தில் அமைந்துள்ள நான்கு கால் மண்டபத்தில் பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி நடை பெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மகிழ மரத்தை சுற்றி 10 முறை அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.