செய்திகள்
மே 10 முதல் 24ஆம் தேதி வரை மெட்ரோ ரெயில் சேவை ரத்து
சென்னையில் மெட்ரோ ரெயில்கள் மே 10 முதல் 24 வரை பொதுமுடக்கத்தின் போது இயங்காது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை:
கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 10 முதல் 24 வரை தமிழகத்தில் முழுப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமுடக்க காலத்தில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படாது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் மக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு வசதியாக நாளை வார இறுதி நாள் பொதுமுடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதையடுத்து நாளை மெட்ரோ ரெயில்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும், காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை 10 நிமிடத்திற்கு ஒரு ரெயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது