செய்திகள்
குறிஞ்சிப்பாடியில் கொரோனாவுக்கு முதியவர் பலி
கடலூர் மாவட்டத்தில் 64 ஆயிரத்து 340 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 64 ஆயிரத்து 340 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 871 பேர் பலியான நிலையில், 63 ஆயிரத்து 338 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. மேலும் 17 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதற்கிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 62 வயது முதியவர், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 872 ஆக உயர்ந்துள்ளது.