லைஃப்ஸ்டைல்
பச்சை பயறு அற்புதமான உணவாகிறது. பச்சை பயறுவை பயன்படுத்தி நோயுற்றுவர்களுக்கு பலம் தரும் கஞ்சி தயாரிக்கலாம். இந்த கஞ்சி எளிதாக ஜீரணம் ஆகும்.
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - கால் கப்
உப்பு - ஒரு சிட்டிகை,
பால் - 1 கப்.
செய்முறை:
பச்சை பயறுவை நன்றாக வறுத்து பொடி செய்து எடுக்கவும்.
இதில் நீர்விட்டு கரைத்து வடிகட்டவும்.
இந்த தண்ணீரை கொதிக்க வைத்து, உப்பு சேர்க்கவும்.
கஞ்சி பதம் வந்தபின் பால் சேர்க்கவும்.
இந்த பச்சை பயறு பால் கஞ்சியை குடித்து வர நோயுற்றவர்களின் உடல் பலம் பெறும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்