செய்திகள்
ரூபி மனோகரன்

நாங்குநேரி இடைத்தேர்தலில் ரூபி மனோகரன் போட்டி - காங்கிரஸ் அறிவிப்பு

Published On 2019-09-27 17:28 GMT   |   Update On 2019-09-27 17:28 GMT
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
 
விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. சார்பில் விழுப்புரத்தைச் சேர்ந்த புகழேந்தி போட்டியிடுவார் என்று மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் போட்டியிடுவார் என அக்கட்சி இன்று தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News