செய்திகள்
திருவையாறு அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை
திருவையாறு அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அருகே அந்தணர்க்குறிச்சி கிராமத்தைச் சேரந்தவர் பெருமாள் மகன் தமிழரசன் (53). கட்டிட மேஸ்திரி. வழக்கம்போல கண்டியூரில் தான் வேலைபார்க்கும் கட்டிடத்திற்கு தண்ணீர் ஊற்றச் சென்றார். சிறிது நேரத்தில் கொத்தனார்கள் மற்றும் வேலையாட்கள் அந்தக் கட்டிடத்திற்கு சென்ற போது தமிழரசன் அக்கட்டிடத்திலேயே தூக்கு மாட்டித் தொங்குவதை அறிந்து அதிர்ச்சியடைந்து உடனே அவரை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதைத் தொடர்ந்து தமிழரசனின் மனைவி பாரதி (40) கொடுத்த புகாரின் பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.