செய்திகள்
நாலச்சோப்ராவில் கொரோனாவை வென்ற 97 வயது முதியவர்
நாலச்சோப்ராவில் கொரோனாவை வென்ற 97 வயது முதியவர் வீடு திரும்பினார். அவரை டாக்டர்கள், ஊழியர்கள் மலர்தூவி வழியனுப்பி வைத்தனர்.
வசாய்:
கொரோனாவுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முதியவர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். மேலும் பல முதியவர்கள் மன உறுதியுடன் சிகிச்சை பெற்று கொரோனாவை வீழ்த்தியும் வருகின்றனர்.
அந்த வகையில் பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா கிழக்கு அச்சோலே கிராமத்தை சேர்ந்த 97 வயது முதியவர் ராம்சந்திரா பாட்டீல் கொரோனாவை வென்று உள்ளார். இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து நாலச்சோப்ராவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் அவருக்கு உடல் நலம் தேறியது.
பூரண குணமடைந்ததை அடுத்து அவரை ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் மலர்தூவி வீட்டிற்கு வழி அனுப்பி வைத்தனர். அவர் சிகிச்சை மையத்தில் இருந்து உற்சாகமாக வீடு திரும்பினார்.
இவரின் பேரனான வைபவ் பாட்டீல், தாத்தா ராம்சந்திரா பாட்டீலை தனது காரில் அமர்த்தி வீட்டிற்கு அழைத்து சென்றார். வைபவ் பாட்டீல் வசாய்-விரார் மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முதியவர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். மேலும் பல முதியவர்கள் மன உறுதியுடன் சிகிச்சை பெற்று கொரோனாவை வீழ்த்தியும் வருகின்றனர்.
அந்த வகையில் பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா கிழக்கு அச்சோலே கிராமத்தை சேர்ந்த 97 வயது முதியவர் ராம்சந்திரா பாட்டீல் கொரோனாவை வென்று உள்ளார். இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து நாலச்சோப்ராவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் அவருக்கு உடல் நலம் தேறியது.
பூரண குணமடைந்ததை அடுத்து அவரை ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் மலர்தூவி வீட்டிற்கு வழி அனுப்பி வைத்தனர். அவர் சிகிச்சை மையத்தில் இருந்து உற்சாகமாக வீடு திரும்பினார்.
இவரின் பேரனான வைபவ் பாட்டீல், தாத்தா ராம்சந்திரா பாட்டீலை தனது காரில் அமர்த்தி வீட்டிற்கு அழைத்து சென்றார். வைபவ் பாட்டீல் வசாய்-விரார் மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.