செய்திகள்
ஸ்வப்னா சுரேஷ்

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னாவுக்கு நெஞ்சுவலி

Published On 2020-09-08 04:12 GMT   |   Update On 2020-09-08 04:12 GMT
கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கேரளா:

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவிற்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில், முன்னாள் தூதரக ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

விய்யூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், ஸ்வப்னா சுரேஷ் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறியதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Tags:    

Similar News