செய்திகள்
சிறுமி திருமணம் நிறுத்தம்

கீரிப்பாறை அருகே 10-ம் வகுப்பு மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2019-08-29 10:15 GMT   |   Update On 2019-08-29 10:15 GMT
கீரிப்பாறை அருகே இன்று நடக்க இருந்த 10-ம் வகுப்பு மாணவியின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
நாகர்கோவில்:

கீரிப்பாறை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது நிரம்பிய 10-ம் வகுப்பு மாணவிக்கு இன்று திருமணம் நடப்பதாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் மற்றும் போலீசார் மாணவியின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதிகாரிகள் மாணவியின் பெற்றோரிடம் விசாரித்தனர்.

அப்போது இன்று திருமணம் நடப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். மாணவிக்கு திருமணம் வயது எட்டாததால் திருமணத்தை நடத்தக்கூடாது என்று அதிகாரிகள் கூறினார்கள். இதையடுத்து இன்று நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

மாணவியையும், அவரது பெற்றோரையும் அதிகாரிகள் குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு அழைத்து வந்து அறிவுரைகளை கூறினார்கள். மணமகன் குடும்பத்தாரையும் வரவழைத்து அவர்களை எச்சரித்து அனுப்பினார்கள்.
Tags:    

Similar News