செய்திகள்
அஸ்வின், கவாஸ்கர்

அஸ்வினை அடிக்கடி நீக்குவதற்கு இதுதான் காரணம்: நிர்வாகம் மீது சாடுகிறார் கவாஸ்கர்

Published On 2019-10-04 13:27 GMT   |   Update On 2019-10-04 13:27 GMT
பெர்பார்மென்ஸைவிட மற்ற பந்து வீச்சாளர்களுடன் ஒப்பிடுவதுதான் அஸ்வினை அடிக்கடி நீக்குவதற்கு காரணம் என கவாஸ்கர் அணி நிர்வாகம் மீது சாடியுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின். முன்னணி சுழற்பந்து வீச்சாளரான இவர் அடிக்கடி அணியில் இருந்து நீக்கப்படுகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் அஸ்வினுக்குப் பதில் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் அஸ்வினுக்கு பெர்பார்மென்ஸைவிட மற்ற பந்து வீச்சாளர்களுடன் ஒப்பிடுவதுதான் பெரிய பிரச்சினையாக உள்ளது. அணி நிர்வாகம் அவரை நடத்தும் முறை குறித்து சுனில் கவாஸ்கர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘தன்னுடன் உள்ள சக வீரர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக அவர் உணர்கிறார். சக வீரர்கள் அவருக்கு நம்பிக்கை அளிக்காதபோது, அவரை அணியில் இருந்த ஓரங்கட்டும்போது, அவர் கொஞ்சம் கடினமாக முயற்சி செய்கிறார்.

மற்ற வீரர்களுடன் ஒப்பிடுவதுதான், அவருக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது என்று நினைக்கிறேன். இதை வைத்துதான் அவரை ஓரங்கட்டுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது, அஸ்வினை நாதன் லயன் உடன் ஒப்பிடுகிறார்கள். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ, அதை செய்கிறார். ஆனால், நாதன் லயன் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுகிறார்.

அதேபோல் இங்கிலாந்தில், மொயின் அலி 6 விக்கெட்டிற்கு மேல் எடுக்கும்போது, அஸ்வினால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை என்று கூறினார்கள். இது நடக்கத்தான் செய்யும்.

350 விக்கெட்டை நெருங்கும் தன்னை, பெர்பார்மென்ஸை காட்டிலும், இந்த ஒப்பிடு சம்பவம் மூலம்தான் ஓரங்கட்டியுள்ளனர் என்று நீக்கியதற்கான காரணத்தை தானாகவே அறிந்திருப்பார். 350 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஒரு பந்து வீச்சாளரை அஸ்வின் போன்று வெளியில் வைக்க முடியாது’’ என்றார்.
Tags:    

Similar News