ஆட்டோமொபைல்
டாடா பன்ச்

டாடா பன்ச் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2021-09-24 07:01 GMT   |   Update On 2021-09-24 07:01 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. புதிய டாடா பன்ச் மாடல் இந்திய சந்தையில் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் டாடா பன்ச் மாடல் மாருதி சுசுகி இக்னிஸ் மற்றும் சிட்ரோயன் சி3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. புதிய பன்ச் மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரலாம். டாடா பன்ச் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் தலைசிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.



புதிய மைக்ரோ எஸ்.யு.வி. மாடலை டாடா நிறுவனம் தனது ஆல்பா-ஆர்க் பிளாட்பார்மில் உருவாக்கி இருக்கிறது. இதன் வடிவமைப்பு இமேக்ட் 2.0 டிசைனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் மல்டி-பன்ஷன் பிளாட்-பாட்டம் ஸ்டீரிங் வீல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் வழங்கப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News