உள்ளூர் செய்திகள்
தற்கொலை

பெருந்துறை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-01-15 05:48 GMT   |   Update On 2022-01-15 05:48 GMT
பெருந்துறை அருகே உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு:

பெருந்துறை அருகே உள்ள திங்களூர் பகுதியை சேர்ந்தவர் செல்வன். கட்டிட தொழிலாளி. இவரது மகள் பவித்ரா (வயது 20). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

பவித்ரா கடந்த 3 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்தார். இதனால் அவர் சரியாக சாப்பிட முடியாமல் அவதி அடைந்து வந்தார்.

இந்த நிலையில் மாணவியின் தந்தை செல்வன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வெளியில் சென்று விட்டனர். தனியாக இருந்த பவித்ரா வீட்டில் உள்ள ஒரு அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரது தந்தைக்கு தகவல் கொடுத்தனர். அவர் வீட்டு வந்து பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்டனர். அப்போது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News