ஆன்மிகம்
மடப்புரம் விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா 24-ந்தேதி நடக்கிறது
சிவகங்கை மாவட்டம் திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா வருகிற 24-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் விலக்கு ஆர்ச் எதிரே திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. விநாயகருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி விழா இந்த கோவிலில் வருகிற 24-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
விழாவுக்கு கோவில் நிர்வாகியும், பிரபல ஜோதிடருமான கரு.கருப்பையா தலைமை தாங்குகிறார். சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து கலந்து கொண்டு தெற்குமுக விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தி 108 முறை வலம் வந்து வழிபாடு செய்வார்கள். பொதுவாக விநாயகர் ஆற்றங்கரை, குளத்தங்கரை, மரத்தடியில் தான் காட்சி
ஆனால் மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் தெற்குமுகமாக விநாயகர் காட்சியளிக்கிறார். இங்குள்ள விநாயகரை வழிபட்டால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.
விழாவுக்கு கோவில் நிர்வாகியும், பிரபல ஜோதிடருமான கரு.கருப்பையா தலைமை தாங்குகிறார். சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து கலந்து கொண்டு தெற்குமுக விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தி 108 முறை வலம் வந்து வழிபாடு செய்வார்கள். பொதுவாக விநாயகர் ஆற்றங்கரை, குளத்தங்கரை, மரத்தடியில் தான் காட்சி
ஆனால் மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் தெற்குமுகமாக விநாயகர் காட்சியளிக்கிறார். இங்குள்ள விநாயகரை வழிபட்டால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.