செய்திகள்
சத்தியமங்கலத்தில் லாட்டரி விற்ற 6 பேர் கைது
சத்தியமங்கலத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி விற்ற 6 பேரை கைது செய்தனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் போலீசாருடன் சத்தியில் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது வடக்கு பேட்டை, சத்யா ரோடு, அத்தாணி ரோடு, திப்புசுல்தான் ரோடு ஆகிய பகுதிகளில் லாட்டரி விற்ற கோவையை சேர்ந்த செல்வன் (வயது 45), சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த சச்சிதானந்தம் (35), அருண் (36), அஜித் (22), நூர்முகமது (31), சாத்தான்குலத்தை சேர்ந்த கவுதம் (22) ஆகிய 6 பேரை கைது செய்தார்கள்.
அவர்களிடம் இருந்து லாட்டாரி விற்ற பணம் 25 ஆயிரத்து 400-யும், அவர்கள் வைத்திருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தார்கள்.