செய்திகள்
கோப்புப்படம்

மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 2,405 பேருக்கு கொரோனா: 47 பேர் பலி

Published On 2021-01-26 17:45 GMT   |   Update On 2021-01-26 17:45 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 2,405 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 2,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  20,13,353 ஆக உயர்ந்துள்ளது.

இன்று  2,106  பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,17,450 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 47 பேர் பலியாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,862 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரை  43,811 சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தகவலை மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News