செய்திகள்
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம்

அமெரிக்கா: அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலி

Published On 2019-11-27 15:46 GMT   |   Update On 2019-11-27 15:46 GMT
அமெரிக்காவின் மினிசோடா மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் மினிசோடா மாகாணத்திற்கு உள்பட்ட மினிஅப்லிஸ் பகுதியில் 24 அடுக்குமாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர்.

இந்நிலையில், அந்த கட்டிடத்தின் 14-வது குடியிருப்பில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் குடியிருப்புக்குள் சிக்கித்தவித்த 4 பேரை காயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News