செய்திகள்
கைது

சூளகிரி அருகே விவசாயியை தாக்கிய 2 பேர் கைது

Published On 2021-06-20 12:58 GMT   |   Update On 2021-06-20 12:58 GMT
சூளகிரி அருகே விவசாயியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:

சூளகிரி அருகேயுள்ள எலசப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 44). விவசாயி. இவரை நிலப்பிரச்சினை தொடர்பாக வரதராஜ், வெங்கடேஷ் ஆகியோர் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதராஜ், வெங்கடேசை கைது செய்தனர்.
Tags:    

Similar News