செய்திகள்
சூளகிரி அருகே விவசாயியை தாக்கிய 2 பேர் கைது
சூளகிரி அருகே விவசாயியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
சூளகிரி அருகேயுள்ள எலசப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 44). விவசாயி. இவரை நிலப்பிரச்சினை தொடர்பாக வரதராஜ், வெங்கடேஷ் ஆகியோர் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதராஜ், வெங்கடேசை கைது செய்தனர்.