ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் கோவில்

அனுமதி இல்லாத காரணத்தால் சமயபுரத்தில் கோவில் முன் நின்று அம்மனை வணங்கிய பக்தர்கள்

Published On 2021-04-30 04:41 GMT   |   Update On 2021-04-30 04:41 GMT
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்ய முடியாமல் கோவில் முன்பு நின்று தரிசனம் செய்து செல்கின்றனர்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலும் பூட்டப்பட்டுள்ளது.

இதன்காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்ய முடியாமல் கோவில் முன்பு நின்று தரிசனம் செய்து செல்கின்றனர்.

அதேநேரத்தில் முடிகாணிக்கை மண்டபமும் மூடப்பட்டுள்ள நிலையில் அனுபவம் இல்லாத சிலர் ரூ.150 முதல் ரூ.300 வரை வாங்கி கொண்டு பக்தர்களுக்கு மொட்டையடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்காரணமாக நோய்தொற்று ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
Tags:    

Similar News