ஆன்மிகம்
ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம்

உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம்

Published On 2020-09-28 02:55 GMT   |   Update On 2020-09-28 02:55 GMT
தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரியில் சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரியில் சமயபுரத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

முன்னதாக சாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், நெய், திரவிய பொடி, திருநீறு உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News