செய்திகள்
லாரி மோதியது- ஷேர் ஆட்டோ டிரைவர் பலி
மதுரையில் லாரி மோதிய விபத்தில் ஷேர் ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை வில்உலாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் மார்க்கண்டேயன்(வயது 57). ஷேர் ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து விமான நிலையம் நோக்கி பயணிகளுடன் ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவனியாபுரம் அருகே வந்தபோது எதிரே வந்த கண்டெய்னர் லாரியில் மோதியதில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவை ஓட்டி வந்த மார்க்கண்டேயன் தவறிக் கீழே விழுந்தார். அவர் மீது கண்டெய்னர் லாரியின் பின் பக்க டயர் ஏறியதால் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். ஆட்டோவில் பயணித்த 4 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம்பட்டவர்களையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
மதுரை வில்உலாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் மார்க்கண்டேயன்(வயது 57). ஷேர் ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து விமான நிலையம் நோக்கி பயணிகளுடன் ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவனியாபுரம் அருகே வந்தபோது எதிரே வந்த கண்டெய்னர் லாரியில் மோதியதில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவை ஓட்டி வந்த மார்க்கண்டேயன் தவறிக் கீழே விழுந்தார். அவர் மீது கண்டெய்னர் லாரியின் பின் பக்க டயர் ஏறியதால் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். ஆட்டோவில் பயணித்த 4 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம்பட்டவர்களையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.