ஆட்டோமொபைல்
புதிய தலைமுறை ஸ்கோடா பேபியா வெளியீட்டு விவரம்
ஸ்கோடா நிறுவனம் தனது புதிய தலைமுறை பேபியா மாடலை விரைவில் சர்வதேச சந்தையில் வெளியிட இருக்கிறது.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் புதிய தலைமுறை பேபியா மாடலை நாளை (மே 4) சர்வதேச சந்தையில் வெளியிடுகிறது. இது விற்பனைக்கு வரும் நான்காம் தலைமுறை பேபியா மாடல் ஆகும். இதன் முதல் தலைமுறை மாடல் 22 ஆண்டுகளுக்கு முன் வெளியானது.
புது தலைமுறை பேபியா மாடல் வோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB A0 பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இது முந்தைய மாடலை விட 111 எம்எம் நீளமாகவும், 48 எம்எம் அகலமாகவும் இருக்கிறது. மேலும் இந்த கார் கூடுதலாக 50 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டிருக்கிறது.
புதிய பேபியா மாடலில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ, 1.0 லிட்டர் டிஎஸ்ஐ ஆப்ஷன் வழங்கப்படலாம். வரும் வாரங்களில் அறிமுகமாக இருக்கும் ஸ்கோடா பேபியா ஆண்டு இறுதியில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. புதிய பேபியா மாடலின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.