ஆன்மிகம்
இயேசு

சவால்களை எதிர்கொள்வோம்

Published On 2019-10-09 04:13 GMT   |   Update On 2019-10-09 04:13 GMT
என் வாழ்வில் எந்தவிதமான சிக்கல்களும், சறுக்கல்களும் வந்து விடக்கூடாது என்று எண்ணுகிறவன், இதுவரை வாழ்வதற்கே ஆரம்பிக்கவில்லை என்று தான் அர்த்தம்.
சவால்கள்தான் உங்களை உங்களுக்கும், உலகிற்கும் அடையாளம் காட்டும். என் வாழ்வில் எந்தவிதமான சிக்கல்களும், சறுக்கல்களும் வந்து விடக்கூடாது என்று எண்ணுகிறவன், இதுவரை வாழ்வதற்கே ஆரம்பிக்கவில்லை என்று தான் அர்த்தம். ஒரு குழந்தை இந்த பூமியில் பிறக்கிறது என்றால் அது சவால்களை எதிர்கொள்வதற்கே என்பதை உணர்ந்திடுவோம்.

ஒரு கப்பல் கடலுக்குள் செல்லுமபோது எவ்வளவு இன்னல்கள் காத்திருக்கிறது. புயல் தோன்றலாம், திமிலங்கள், சுற மீன்கள் கப்பலை கவிழ்த்து போடலாம், காற்று திசைமாறி இழுத்து செல்லலாம். திடீரென பெரும் ஆபத்துகள் நேரிடலாம். பயணத்தின் போது பாறையில் மோதி கப்பல் உடைந்து போகலாம். வெறுமனே பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைப்பதற்காக கப்பல் கட்டப்பட வில்லை. மாறாக எல்லாவற்றையும் எதிர்கொண்டு பயணம் செய்வதற்குதான் கட்டப்படுகிறது. இதைப்போன்று தடைகள் சவால்கள் தான் ஒரு மனிதனை இன்னொரு உயரியவனாக மாற்றுகிறது. சாதாரமாண விஷயங்கள் நம்மை உயரியவனாக உருமாற்றுகிறது. தடைகளை, ஆபத்துகளை கண்டு ஒருபோதும் மனம் கலங்க வேண்டாம். மாறாக அனைத்தையும் மகிழ்வோடு எதிர்கொள்ளுங்கள். எதிர்ப்பு இல்லாத வாழ்க்கைக்கு ஒருபோதும் ஆசைப்படாதீர்கள். தன்னை எதிர்த்து பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூர் அறிஞர்கள் ஆகியோரை இயேசு அன்பு செய்தார். அதைப்போன்று இறையருளின் காலமாகிய தவக்காலத்திற்குள் நுழைந்திருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் நம்மை எதிர்க்கின்ற மனிதர்களை அன்பு செய்வோம். மானுட வாழ்வில் சவால்கள் மிக அதிகமாகஉண்டு. இதனை கண்டு அஞ்சிவிட்டால் தொடர் வளர்ச்சிக்கு வாய்ப்பு இல்லாமல்போய்விடும். நம்முடைய தினசரி கால அட்டவணையில் பிரச்சனைகளை கையாளுவதற்கான வழிமுறைகளை யும் சிந்தித்து பாருங்கள். நாம் முடங்கி போவதற்காக இறைவன் நமக்கு பிரச்சினைகளை கொடுக்கவில்லை. மாறாக இன்னும் சக்தி உடையவர்களாக, எழுச்சி மிக்கவர்களாக வாழ்வதற்கே கொடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்திடுவோம்.

சவால்களையும் அன்பு செய்ய பழகுவோம். சாவல்களை எதிர்கொள்வோம். ஒவ்வொன்றும் ஒருவிதமான அனுபவங்களையும், வாழ்க்கை பாடத்தையும் நமக்கு உருவாக்கி கொடுக்கிறது. நான் யார் என்பதையும், நான் இன்னும் எவ்வளவு விவேகமாக வேகமாக செயல்பட வேண்டும் என்பதற்கான தன்னம்பிக்கை பாதையினையும் கற்று தருகிறது என்பதை புரிந்து வாழ்வின் பாதையில் பயணிப்போம்.

அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.
Tags:    

Similar News