ஆட்டோமொபைல்
சோதனையில் சிக்கிய டாடா ஹேரியர் ஆட்டோமேடிக்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் ஆட்டோமேடிக் வெர்ஷன் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹேரியர் கார் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் மூன்று அடுக்குகளில் ஏழு பேர் அமரக்கூடிய வகையில் உருவாகி இருக்கிறது.
ஏழு பேர் அமரக்கூடிய ஆட்டோமேடிக் எஸ்.யு.வி. கார் தனிப்பட்ட மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஹேரியர் மாடல் இந்த ஆண்டு நடைபெற்ற ஜெனிவா மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட தயாரிக்கப்பட்ட நிலையில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது.
புதிய டாடா ஹேரியர் கார் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருக்கிறது. இதன் புதிய ஸ்பை படங்களில் ஏழு பேர் அமரக்கூடிய டாடா ஹேரியர் கார் 18 இன்ச் அலாய் வீல்கள் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. புதிய காரின் உயரம் 80மில்லிமீட்டர் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் கூடுதல் இடத்தை மூன்றாம் அடுக்கு இருக்கையை முடிந்தவரை வசதியாக வைத்துக் கொள்ள முடியும். மூன்றாம் அடுக்கு இருக்கைகளிலும் ஏ.சி. வென்ட்கள், சார்ஜிங் சாக்கெட் மற்றும் யு.எஸ்.பி. கனெக்டிவிட்டி போன்றவை வழங்கப்படுகிறது.
டாடா ஹேரியர் காரில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது 170 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: Rushlane