ஆன்மிகம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்

செவ்வாய் தோஷம் நீக்கும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்

Published On 2021-01-05 07:10 GMT   |   Update On 2021-01-05 07:10 GMT
செவ்வாய் தோஷம் இருந்தால் சகோதர உறவுகளின் ஒற்றுமை குறையும், ஆரோக்கியம் சீர்கெடும், பூர்வீக சொத்து, நிலம், வீடு சம்மந்தப்பட்ட வழக்கு இழுப்பறியாகும்.
செவ்வாய் தோஷம் இருந்தால் சகோதர உறவுகளின் ஒற்றுமை குறையும், ஆரோக்கியம் சீர்கெடும், பூர்வீக சொத்து, நிலம், வீடு சம்மந்தப்பட்ட வழக்கு இழுப்பறியாகும். 

கடன் அதிகரித்து கொண்டே போகும். ரத்த அழுத்த மாறுபாடு ரத்த தொற்று நோய், அடிக்கடி காயம் ஏற்படுதல், தலை சுற்றல், பெண்களுக்கு மாதாந்திர உபாதைகளின் சிரமம் இப்படிப்பட்ட பிரச்சினைகளால் சிரமப்படும் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் காலையில் நன்றாக குளித்து விட்டு வரும் வழியில் உள்ள சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்மாளை தரிசித்து அர்ச்சனை செய்துவிட்டு அதன் பின்பு முத்தாரம்மன் கோவிலில் துர்க்கைக்கு நெய் விளக்கு ஏற்றுங்கள். 

அதன்பின் நவக்கிரக நாயகி முத்தாரம்மனை தரிசித்து சர்க்கரை பாயாசம் அம்மனுக்கு படைத்து பக்தர்களுக்கு தானமாக கொடுங்கள். உங்கள் செவ்வாய் தோஷம் விலகி வாழ்க்கை செழிப்பாகும்.
Tags:    

Similar News