செய்திகள்
தற்கொலை

தேங்காய்திட்டில் காதல் தோல்வியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-09-17 10:34 GMT   |   Update On 2021-09-17 10:34 GMT
புதுவை தேங்காய்திட்டில் காதல் தோல்வியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

புதுவை தேங்காய்திட்டு கோமல் நகர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் விக்னேஷ் (வயது 26). இவர் பி.பி.ஏ. படித்து விட்டு எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக விக்னேஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண் விக்னேசை விரும்பவில்லை என தெரிகிறது. எனினும் விக்னேஷ் அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார்.

இதற்கிடையே விக்னேஷ் காதலித்து வந்த பெண்ணுக்கு வேறொருவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நடந்ததால் விக்னேஷ் விரக்தியில் இருந்து வந்தார்.

கடந்த சில நாட்களாக அவர் வீட்டில் யாரிடமும் பேசாமலும், சாப்பிடாமலும் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது சகோதரர் வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் ஏட்டு ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

காதல் தோல்வியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News