ஆன்மிகம்
ஈரோடு ஓங்காளியம்மன் கோவிலில் தெப்ப உற்சவ நிகழ்ச்சி

ஈரோடு ஓங்காளியம்மன் கோவிலில் தெப்ப உற்சவ நிகழ்ச்சி

Published On 2021-03-08 07:02 GMT   |   Update On 2021-03-08 07:02 GMT
ஈரோடு ஓங்காளியம்மன் கோவில் தெப்ப உற்சவத்தில் ஓங்காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
ஈரோடு கோட்டை பெரியபாவடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 5-ந் தேதி குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா நடந்தது. முன்னதாக காலை 6 மணிக்கு குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பின்னர் கோவில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். இதைத்தொடர்ந்து மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சிங்க வாகனத்தில் அம்மனின் திருவீதி உலா நடந்தது.

நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி ஓங்காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நேற்று காலை 10 மணிக்கு மறு அபிஷேகத்துடன் விழா நிறைவடைந்தது.
Tags:    

Similar News